Friday, 5 January 2018

பாதச் சனியின் பலன்கள்


பாதச் சனியின் பலன்கள் என்ன?
ஜோதிடர் பதில்கள் !

1. எந்தெந்த நாட்களில் விரதத்தை மேற்கொள்ள வேண்டும்?

🌟 மனதிற்கு விரும்பிய இஷ்ட தெய்வத்திற்கு உரிய நாட்களில் விரதங்களை மேற்கொள்ளலாம்.

🌟 முக்கிய விரத தினங்களில் மட்டும் விரதங்களை மேற்கொள்ளவும். விரதம் மேற்கொள்பவர்கள் தங்களின் உடல்நிலைக்கு ஏற்ப விரதத்தினை கடைபிடிக்கவும்.

🌟 உடல் நிலை ஒத்துழைப்பு இல்லாதவர்கள் இறைவனை மனதில் எண்ணி அவரை உருகி வழிபட்டாலே எண்ணிய எண்ணம் ஈடேறும்.

2. அதிகாலையில் கண்ணாடி உடைந்தால் நல்லதா? கெட்டதா?

🌟 கண்ணாடி உடைவது என்பது சுப நிகழ்வு அல்ல.

🌟 இந்நிகழ்வு செல்லும் காரியங்களில் காரியத்தடை உருவாகும் என்பதை சுட்டிக் காட்டுகிறது.

3. பாதச் சனியின் பலன்கள் என்ன?

🌟 இராசிக்கு இரண்டில் சனி தேவர் சஞ்சாரம் செய்வது பாதச் சனியாகும். இந்நிலையில் உள்ள சனி தேவரை குடும்ப சனி அல்லது பாதச் சனி என்று அழைப்பார்கள்.

🌟 சனி பகவான் விரயச் சனி மற்றும் ஜென்ம சனி அளவிற்கு பாதச் சனியின் போது பாதகங்களை ஏற்படுத்த மாட்டார். பாதச் சனி நடைபெறும்போது வடுக்கள் மற்றும் காயங்கள் ஏற்படுவதற்கான சூழல் அமையும்.

🌟 கல்வியிலும்இ பதவிகளிலும் எந்தவித முன்னேற்றமும் இன்றி மந்த நிலையாகவே இருக்கும்.

🌟 வீடு கட்டுபவர்களுக்கு வேலையாட்கள் சரியாக அமையாமல் பாதியில் நிற்கும் நிலை ஏற்படும். கால்நடைகள் மற்றும் வாகனங்களால் இலாபம் இருக்காது.

Wednesday, 3 January 2018

கோவில்களில் தர்மம் செய்யலாமா? செய்யக்கூடாதா?


1. கோவில்களில் தர்மம் செய்யலாமா? செய்யக்கூடாதா?
 கோவில்களில் தர்ம காரியங்கள் அனைத்தையும் செய்யலாம்.
 கோவில்களில் இறைவனின் காலில் மட்டுமே பணிய வேண்டும். எனவே கோவில்களில் மட்டும் பெரியோர்களின் காலில் பணிதலை தவிர்த்தல் நல்லது.
 ஏனெனில் மானிட பிறவிகளைக் காட்டிலும் கோவிலில் இறைவனே உயர்ந்தவன்.
 ஏழைகளின் சிரிப்பில் இறைவனை காண முடியும். பிறருக்கு உதவுவதின் மூலம் நாம் செய்த கர்மவினைகளால் ஏற்படும் அசுப பலனை மாற்ற இயலும்.
2. திருமணப் பொருத்தம் பார்க்கும்போது அனைத்து பொருத்தமும் இருந்து நட்சத்திரப் பொருத்தம் இல்லை என்றால் திருமணம் செய்யலாமா?
 நட்சத்திரப் பொருத்தம் இல்லையென்றாலும் பாவக ரீதியான பொருத்தங்கள் இருப்பின் திருமணம் செய்யலாம்.
3. கனவில் நீல நிறமும்இ கருப்பு நிறமும் ஒன்றாக கலந்த பாம்பை கண்டால் என்ன பலன்?
 கனவில் சர்ப்பத்தைக் காண்பது எதிரிகளால் பிரச்சனைகள் ஏற்படுவதைக் குறிக்கிறது.
 மேலும் நீலம் மற்றும் கருப்பு நிறம் கலந்த சர்ப்பம் வேலையாட்களால் தொழிலில் முடக்க நிலை உருவாதலைக் குறிக்கிறது.
 எனவே நாக புற்றுகளுக்கு பால் ஊற்றுதல் மற்றும் விநாயகரை வழிபடுவதன் மூலம் பிரச்சனைகளின் வீரியத்தை குறைக்கலாம்.

கனவில் குலதெய்வம் வந்தால் என்ன பலன்?


1. கனவில் குலதெய்வம் வந்தால் என்ன பலன்?
🍃 கனவில் குலதெய்வம் வந்தால் குலதெய்வ வழிபாடு மேற்கொள்ள வேண்டும் என்பதைக் குறிக்கிறது.
🍃 அவரவர் குலவழக்கப்படி குலதெய்வத்தை வழிபட வேண்டும்.
🍃 கனவில் குலதெய்வத்தை காண்பது எடுத்த காரியத்தில் வெற்றி உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.
2. கனவில் எறும்பை கண்டால் என்ன பலன்?
🍃 கனவில் எறும்பைக் கண்டால் வெளிநாட்டு தொழில் முயற்சிகளால் இலாபம் உண்டாகும்.
🍃 நீங்கள் செய்ய நினைத்த காரியம் வெற்றி பெறும்.
3. பால் காய்ச்சுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?
🍃 பால் காய்ச்சுவது போல் கனவு காண்பது பொருள் சேர்க்கை ஏற்படுவதைக் குறிக்கிறது.

🍃 பால்காரர்களை கனவில் கண்டால் பலவித நன்மைகள் உண்டாகும்.

Tuesday, 2 January 2018

வெளியே செல்லும் போது பிணத்தை பார்த்தால் நல்லதா? கெட்டதா?


முன் தலையில் சுழி இருந்தால் என்ன பலன்?
ஜோதிடர் பதில்கள் !

🌟 முன் தலையில் சுழி இருப்பது லட்சுமி கடாட்சம் உடையவர் என்பதைக் குறிக்கிறது.

🌟 அவர் வளர வளர குடும்பமும் வளர்ச்சியடைந்து கொண்டே இருக்கும்.

🌟 மேலும்இ செல்வ செழிப்புகள் அதிகரிக்கும்.

2. தாய்மாமன் இறப்புக்கு எத்தனை நாள் துக்கம் கடைபிடிக்க வேண்டும்?

🌟 தாய்மாமன் இறப்புக்கு வீட்டில் உள்ள திருமணம் ஆன மற்றும் திருமணம் ஆகாத ஆண்கள் மூன்று மாதங்கள் துக்கம் கடைபிடிக்க வேண்டும்.

🌟 திருமணம் ஆகாத பெண்கள் மூன்று மாதங்கள் துக்கம் கடைபிடிக்க வேண்டும்.

🌟 திருமணம் ஆன பெண்கள் துக்கம் கடைபிடிக்க வேண்டியதில்லை. ஏனெனில் அவர்கள் வேறு வீட்டிற்கு மருமகளாக சென்று விடுவார்கள்.

3. வெளியே செல்லும் போது பிணத்தை பார்த்தால் நல்லதா? கெட்டதா?

🌟 வெளியே செல்லும் போது எதிரில் பிணம் வருவதைப் பார்த்தால் காரிய சித்தி உண்டாகும்.

🌟 வெளியே செல்லும் போது பிணத்தை எடுத்து செல்லும் திசையில் நீங்களும் சென்றால் எண்ணிய செயல் ஈடேறுவதில் காலதாமதமாகும்.

கரையான் வீட்டில் இருந்தால் நல்லதா? கெட்டதா?


1. கரையான் வீட்டில் இருந்தால் நல்லதா? கெட்டதா?

🍁 வீட்டில் கரையான் இருப்பது என்பது வீடு சுத்தம் இல்லாமல் இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறது.

🍁 கரையான் வீட்டில் இருப்பது தன நஷ்டத்தையும்இ வீட்டில் உள்ளவர்களுக்கு ஆரோக்கிய குறைபாடு ஏற்படும் என்பதைக் குறிக்கிறது.

🍁 எனவே வீட்டை சுத்தம் செய்து தேவையற்ற பொருள்களை அகற்றி விடவும்.

🍁 மேலும் வீட்டை சுத்தம் செய்யும்போது புனித தலங்களின் கடல் நீரை பயன்படுத்துவது சிறப்பாகும்.