1. கோவில்களில் தர்மம் செய்யலாமா? செய்யக்கூடாதா?
கோவில்களில் தர்ம காரியங்கள் அனைத்தையும் செய்யலாம்.
கோவில்களில் இறைவனின் காலில் மட்டுமே பணிய வேண்டும். எனவே கோவில்களில் மட்டும் பெரியோர்களின் காலில் பணிதலை தவிர்த்தல் நல்லது.
ஏனெனில் மானிட பிறவிகளைக் காட்டிலும் கோவிலில் இறைவனே உயர்ந்தவன்.
ஏழைகளின் சிரிப்பில் இறைவனை காண முடியும். பிறருக்கு உதவுவதின் மூலம் நாம் செய்த கர்மவினைகளால் ஏற்படும் அசுப பலனை மாற்ற இயலும்.
2. திருமணப் பொருத்தம் பார்க்கும்போது அனைத்து பொருத்தமும் இருந்து நட்சத்திரப் பொருத்தம் இல்லை என்றால் திருமணம் செய்யலாமா?
நட்சத்திரப் பொருத்தம் இல்லையென்றாலும் பாவக ரீதியான பொருத்தங்கள் இருப்பின் திருமணம் செய்யலாம்.
3. கனவில் நீல நிறமும்இ கருப்பு நிறமும் ஒன்றாக கலந்த பாம்பை கண்டால் என்ன பலன்?
கனவில் சர்ப்பத்தைக் காண்பது எதிரிகளால் பிரச்சனைகள் ஏற்படுவதைக் குறிக்கிறது.
மேலும் நீலம் மற்றும் கருப்பு நிறம் கலந்த சர்ப்பம் வேலையாட்களால் தொழிலில் முடக்க நிலை உருவாதலைக் குறிக்கிறது.
எனவே நாக புற்றுகளுக்கு பால் ஊற்றுதல் மற்றும் விநாயகரை வழிபடுவதன் மூலம் பிரச்சனைகளின் வீரியத்தை குறைக்கலாம்.
No comments:
Post a Comment