Tuesday, 2 January 2018

வெளியே செல்லும் போது பிணத்தை பார்த்தால் நல்லதா? கெட்டதா?


முன் தலையில் சுழி இருந்தால் என்ன பலன்?
ஜோதிடர் பதில்கள் !

🌟 முன் தலையில் சுழி இருப்பது லட்சுமி கடாட்சம் உடையவர் என்பதைக் குறிக்கிறது.

🌟 அவர் வளர வளர குடும்பமும் வளர்ச்சியடைந்து கொண்டே இருக்கும்.

🌟 மேலும்இ செல்வ செழிப்புகள் அதிகரிக்கும்.

2. தாய்மாமன் இறப்புக்கு எத்தனை நாள் துக்கம் கடைபிடிக்க வேண்டும்?

🌟 தாய்மாமன் இறப்புக்கு வீட்டில் உள்ள திருமணம் ஆன மற்றும் திருமணம் ஆகாத ஆண்கள் மூன்று மாதங்கள் துக்கம் கடைபிடிக்க வேண்டும்.

🌟 திருமணம் ஆகாத பெண்கள் மூன்று மாதங்கள் துக்கம் கடைபிடிக்க வேண்டும்.

🌟 திருமணம் ஆன பெண்கள் துக்கம் கடைபிடிக்க வேண்டியதில்லை. ஏனெனில் அவர்கள் வேறு வீட்டிற்கு மருமகளாக சென்று விடுவார்கள்.

3. வெளியே செல்லும் போது பிணத்தை பார்த்தால் நல்லதா? கெட்டதா?

🌟 வெளியே செல்லும் போது எதிரில் பிணம் வருவதைப் பார்த்தால் காரிய சித்தி உண்டாகும்.

🌟 வெளியே செல்லும் போது பிணத்தை எடுத்து செல்லும் திசையில் நீங்களும் சென்றால் எண்ணிய செயல் ஈடேறுவதில் காலதாமதமாகும்.

No comments:

Post a Comment